உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மாரியம்மன் கோவில் திருவிழா இன்று கம்பம் நடுதலுடன் துவக்கம்

மாரியம்மன் கோவில் திருவிழா இன்று கம்பம் நடுதலுடன் துவக்கம்

கரூர், கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இன்று இரவு, கம்பம் நடுதலுடன் விழா தொடங்குகிறது. அதைதொடர்ந்து வரும், 16 ல் பூச்சொரிதல் விழா, 18 ல் காப்பு கட்டுதல், 26 ல் தேரோட்டம், 27 ல் மா விளக்கு ஊர்வலம், பால் குடம் ஊர்வலம், அக்னி சட்டி எடுத்தல், 28ல் கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.மேலும் வரும் ஜூன், 5 ல் பஞ்ச பிரகாரம், 6ல் புஷ்ப பல்லக்கு, 7 ல் ஊஞ்சல் உற்சவம், 8 ல் அம்மன் குடிபுகுதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. இதனால், கோவில் வளாகத்தில் வைகாசி திருவிழாவுக்காக, பந்தல் அமைக்கும் பணிகள், பக்தர்கள் எளிதாக நடந்து செல்ல தற்காலிக படிக்கட்டுக்கள், அமைக்கும் பணி நேற்று நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை