உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / ரூர் அருகே சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

ரூர் அருகே சாலை சேதம் வாகன ஓட்டிகள் அவதி

ககரூர், கரூர் அருகே, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே, பல மாதங்களாக சாலை சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.கரூர் மாவட்டம், வாங்கப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. மேலும், அந்த பகுதியில் ஓட்டல்கள், டீக்கடைகள், ஏராளமான வீடுகள் உள்ளன. இதனால், தொடக்கப்பள்ளி பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல பல மாதங்களுக்கு முன், வேகத்தடைகள் அமைக்கப்பட்டது. தற்போது, வேகத்தடையையொட்டியுள்ள சாலை, சேதமடைந்துள்ளது.அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுகிறது. எனவே, வாங்கப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே வேகத்தடை பகுதியில், சேதமடைந்த சாலையை, உடனடியாக சரி செய்ய, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ