உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை

காசிபாளையத்தில் நிழற்கூடம் அமைக்க பயணிகள் கோரிக்கை

அரவக்குறிச்சி:சின்னதாராபுரத்தில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் காசிபாளையம் உள்ளது. இங்கிருந்து, பல்வேறு பணிகளுக்காக, தினமும் கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். சின்னதாராபுரம் சாலையில், காசிபாளையம் பஸ் நிறுத்தம் பகுதிக்கு வந்து, பஸ்களில் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. மழை மற்றும் வெயில் காலங்களில், பொதுமக்கள் வெட்ட வெளியில் பஸ்சுக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. காசிபாளையம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை