உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா கோலாகலம்

கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா கோலாகலம்

கரூர், அக். 30-கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பிரதோஷ விழாவில், நேற்று பக்தர்கள் பங்கேற்றனர்.பிரசித்தி பெற்ற, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி சிலைக்கு நேற்று மாலை, 4:30 முதல், 5:00 மணி வரை பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, 18 வகையான பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடந்தது. பிறகு, நந்தி சிலைக்கு வெள்ளி கவசம் பொருத்தப்பட்டு, மஹா தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து மூலவர், நடராஜர் சிலைகளுக்கு மஹா தீபாராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.* வேலாயுதம்பாளையம் அருகே, நன்செய் புகழூர் பாகவல்லி அம்பிகை சமேத மேக மாலீஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தை யொட்டி நேற்று மாலை நந்தி சிலைக்கு, வாசனை திரவியங்கள் மூலம் அபி ேஷகம் நடந்தது. பிறகு, மூலவர் மேகபாலீஸ்வரர் சிறப்பு பூக்கள் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதேபோல், புன்னம் புன்னைவன நாதர் உடனுறை, புன்னைவன நாயகி கோவில், திருகாடுதுறை மாதேஸ்வரன் கோவில், நத்தமேடு ஈஸ்வரன் கோவில்களிலும், பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி