பாலமலை கோவில் அடிவாரத்தில் நிழற்கூடம் அமைக்க கோரிக்கை
கரூர்:கரூர் அருகே புகழ் பெற்ற கோவில் பகுதியில், நிழற்கூடம் அமைக்க வேண்டும் என, பக்தர் கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம், க.பரமத்தி பவித்திரம் அருகே பிரசித்தி பெற்ற பாலமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. மேலும், அதே பகுதியில் அருகருகே பெருமாள் கோவில், அம் மன் கோவில்கள் அமைந்துள்ளன. கரூர் மாவட்டம் மட்டுமின்றி, நாமக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பவுர்ணமி, கார்த்திகை, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், பாலமலைக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.ஆனால், பாலமலை பஸ் ஸ்டாப்பில் பயணிகள் நிழற்கூடம் இல்லை. இதனால், பாலமலைக்கு வரும் பக்தர்கள் மழையிலும், வெயிலிலும் நின்று அவதிப்படுகின்றனர். எனவே, கோவில் அடிவார பகுதியில் உள்ள பாலமலை பஸ் ஸ்டாப்பில், பயணிகள் நிழற்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.