உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வே.பாளையம் பைபாஸ் - கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

வே.பாளையம் பைபாஸ் - கந்தம்பாளையம் வரை மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை

கரூர், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் வரை, விரிவாக்க சாலையில், மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் வழியாக ஈரோடு மாவட்டம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல் கந்தம்பாளையம் வரை, சாலை விரிவாக்க பணிகள் சமீபத்தில் தொடங்கின. தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நிறைவு பெற்று, சாலையின் நடுவே தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.ஆனால், மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை. இதனால், வேலாயுதம்பாளையம் பைபாஸ் முதல், கந்தம்பாளையம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், இருளில் மூழ்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, மின் விளக்குள் பொருத்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை