உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கோவை-ஈரோடு பிரிவு சாலையில் ரவுண்டானா: மக்கள் வலியுறுத்தல்

கோவை-ஈரோடு பிரிவு சாலையில் ரவுண்டானா: மக்கள் வலியுறுத்தல்

கரூர்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை-ஈரோடு பிரிவு சாலையில், ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர்-கோவை மற்றும் ஈரோடு சாலை திருகாம்புலியூர் முனி-யப்பன் கோவில் அருகே பிரிந்து செல்கிறது. இந்த வழியாக நாள்-தோறும், லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் ஆயிரக்க-ணக்கில் சென்று வருகின்றன. முனியப்பன் கோவில் பகுதியில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. சில நாட்களில் மட்டும், அந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் உள்ளனர். அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்சத்தில், கோவை மற்றும் ஈரோடு சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படு-கிறது. இதனால், முனியப்பன் கோவில் பகுதியில் ஏற்படும் விபத்-துகளை தவிர்க்க ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொது-மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.இதுகுறித்து, திருக்காம்புலியூர் மக்கள் கூறியதாவது: கோவை சாலை ஆண்டாங்கோவில் பகுதியில் இரண்டு பள்ளிகளும், திரு-காம்புலியூர் பகுதியில் ஒரு பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் விபத்து நடக்கும் பிரிவு சாலை பகுதியில் நடந்தும், சைக்கிளிலும் செல்-கின்றனர். இதை தவிர, அந்த பகுதியில் வசித்து வருவோரும் செல்கின்றனர். எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்க, முனி-யப்பன் கோவில் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை