உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழா

சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழா

கரூர், சேமங்கி, மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.கரூர் மாவட்டம், சேமங்கி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 4ல் பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து, பல்வேறு சிறப்பு வாகனங்களில், உற்சவர் அம்மன் திருவீதி உலா நடந்தது. பிறகு, அம்மனுக்கு வடிசோறு நிகழ்ச்சி, காவிரியாற்றில் பக்தர்கள் புனித நீராடுதல், தேரோட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம், மாவிளக்கு ஊர்வலம், கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் மற்றும் கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி, நேற்று மாலை மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை