ஐந்து சாலையில் ஆறாக ஓடிய கழிவு நீர்: வாகன ஓட்டிகள் அவதி
கரூர்: கரூர் அருகே, சாலையில் கழிவு நீர் நேற்று காலை ஆறாக ஓடி-யது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்பட்டனர்.கரூர் மாநகராட்சி, ஐந்து சாலை கோடீஸ்வரர் கோவில் பகுதியில் ஓட்டல்கள், பள்ளிகள், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவ-னங்கள் உள்ளன. ஆனால் அப்பகுதியில் உள்ள, சாக்கடை கால்-வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதை, சரி செய்யக்கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும், கரூர் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்யாமல் உள்ளது. இந்நிலையில், பல நாட்களாக கரூர் ஐந்து சாலை கோடீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடி வருகிறது. துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாக்கடை கால்வாயில் இருந்து, கழிவு நீர் வெளியேறுவதை தடுக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.