நடு அக்ரஹாரத்தில் சீதாராம கல்யாண மஹோத்ஸவ விழா
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம், நடு அக்ரஹாரத்தில் சீதாராம கல்யாண மஹோத்ஸவம் நிகழ்ச்சியை முன்னிட்டு பந்தக்கால் நடும் விழா நடந்தது.கிருஷ்ணராயபுரம் நடு அக்ரஹாரத்தில், 37ம் ஆண்டு சீதாராம கல்யாண மஹோத்ஸவம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு விழா வரும், 29ல் துவங்கி ஜூன் 2 வரை நடக்கிறது. அதன்படி நேற்று காலை, நடு அக்ரஹாரத்தில் பந்தக்கால் நடும் விழா துவங்கியது. இப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, சீதாராம கல்யாண மஹோத்ஸவம் கமிட்டி குழுவினர் செய்துள்ளனர்.