/ உள்ளூர் செய்திகள் / கரூர் / எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கரூர்:கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மூன்று நாள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடந்தது.கே.ஆர். நிறுவன குழுமத்தின் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். அடுத்த தலைமுறைக்கான, எதிர்கால தயார்நிலை திறன்களை உருவாக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு என்ற தலைப்பில், 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்பு நடந்தது.நிகழ்ச்சியில், இணை செயலாளர் சரண் குமார், கல்லுாரி முதல்வர் முருகன், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, டீன்- அட்மிஷன் சுந்தரராஜு, மாணவர் நலத்துறை தலைவர் ரமேஷ், முதலாமாண்டு துறைத்தலைவர் சித்திரகலா உள்பட பலர் பங்கேற்றனர்.