மேலும் செய்திகள்
அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
17-Jun-2025
கரூர், கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால்நிலையம் முன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமை வகித்தார். காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரி அலுவலக உதவியாளர் முத்துமாரி தாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தும், ஒருவாரம் கடந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தாக்கியவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத் தலைவர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் திருநாவுக்கரசு, கண்ணதாசன், மாவட்ட செயலாளர் சிங்கராயர் உள்பட பலர் பங்கேற்றனர்.
17-Jun-2025