உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பைக்கிலிருந்து தவறி விழுந்த மூவர் காயம்

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூவர் காயம்

குளித்தலை: திருச்சி மாவட்டம், ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் பெரியசாமி, 42. இவருடன் எடமலைப்பட்டி புதுார் ரத்தினகுமார், 60, சிவாயம் ராம்பிரபு, 35, ஆகியோர் கடந்த 10ம் தேதி மதியம், 2:20 மணியளவில் கரூர் - திருச்சி நெடுஞ்சாலை சித்திரபாய் கல்-லுக்கடை பாலம் அருகே, யமஹா பைக்கில் ராம் பிரபு ஓட்ட, பின்னால் பெரியசாமி, ரத்தினகுமார் அமர்ந்து சென்றனர். எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி பைக்கில் இருந்து மூவரும் கீழே விழுந்தனர். இதில் மூவரும் படுகாயமடைந்து, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து, மாயனுார் போலீசார் விசாரணை நடத்தி வரு-கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி