செம்மடை பாலத்தின் அடியில் தேங்கும் மழை நீரால் அவதி
கரூர், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், செம்மடை உயர்மட்ட பாலம் வழியாக, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. பாலத்தில் கீழ் பகுதியில் உள்ள, சர்வீஸ் சாலையில் போதிய வடிகால் வசதி இல்லை. இதனால், சாலையில் நீண்ட நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. சாலை வழியாக வாகனங்கள், சிரமப்பட்டு செல்ல வேண்டி உள்ளது. மழைநீர் தேங்கி நிற்கும் போது, மக்களால் நடந்து கூட செல்ல முடிவதில்லை. எனவே இப்பகுதியில், மழைநீர் செல்லும் வகையில், வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.