ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை, 15,000 கன அடியாக அதிகரித்தது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைகளின் பாதுகாப்பு கருதி, தமிழகத்திற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 8,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்றிரவு, 7:00 மணிக்கு, 15,000 கன அடியாக அதிகரித்தது. இதனால், ஒகேனக்கல் ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ், மெயின் பால்ஸ், மெயினருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.