துண்டு பிரசுரம் வழங்கி வாக்களிக்க விழிப்புணர்வு
சூளகிரி, மார்ச் 25கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி பொது பார்வையாளர் சவுரவ்பாபு சிங்ஹால், சூளகிரி தினசரி காய்கறி சந்தையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம், 100 சதவீதம் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து, துண்டு பிரசுரங்களை நேற்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சூளகிரி தாசில்தார் ரமேஷ்பாபு, பி.டி.ஓ.,க்கள் கலா, விஜயா உட்பட பலர் உடனிருந்தனர்.