எருது விடும் விழா 4 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி,: வேப்பனஹள்ளி அருகே உள்ள பொன்னப்ப கவுண்டனுாரில், கடந்த, 22ல், அனுமதியின்றி எருது விடும் விழா நடந்ததாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்த போலீசார், லட்சுமணன், 37, மாதவன், 46, வடிவேல், 41, திருப்-பதி, 33, ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.