முதியவர் உட்பட இருவர் மாயம்
கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அடுத்த ஆவல்நத்தத்தை சேர்ந்த முதியவர் வர-தப்பன், 70; இவர் கடந்த மாதம், 31ல் வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் மாயமானார். அவரது மகன் புகார் படி, குருபரப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர். ஊத்தங்கரை அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், 16 வயது பிளஸ் 2 மாணவர். இவர் கடந்த, 2 இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்ப-வில்லை. மாணவனின் பெற்றோர் அளித்த புகார் படி, ஊத்தங்-கரை போலீசார் விசாரிக்கின்றனர்.