கற்கள் கடத்திய 2 லாரி பறிமுதல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கனிம வளத்துறை உதவி இயக்குனர் சரவணன் மற்றும் அதிகாரிகள், பர்கூர் வாணியம்பாடி ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் நின்றிருந்த ஒரு மினி லாரி மற்றும் டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில், 8 யூனிட் கற்கள் அனுமதியின்றி எடுத்து வரப்பட்டது தெரிந்தது.இது குறித்து அதிகாரி சரவணன் புகார் படி, பர்கூர் போலீசார், 2 லாரிகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.