உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / அரசு மகளிர் கல்லுாரியில் கலைத்திருவிழா

அரசு மகளிர் கல்லுாரியில் கலைத்திருவிழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது. இதில், கவிதை, கட்டுரை எழுதுதல், பேச்சு போட்டி ஆகியவை நடந்தது. இதை கல்லுாரி முதல்வர் கீதா துவக்கி வைத்தார். கவிதை போட்டி யில், 13 பேர், கட்டுரை போட்டியில், 21 பேர், பேச்சு போட்டியில், 13 பேர் என மொத்தம், 47 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.இதில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு, முதல் பரிசு, 10,000 ரூபாய், 2ம் பரிசு, 7,000 ரூபாய், 3ம் பரிசு, 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இப்போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியர் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை