பிரதமரை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி: இஸ்லாமிய மக்களுக்கு எதிராக, வக்ப் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்ததால், பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்-டித்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், கிழக்கு மாவட்ட காங்., சார்பில் நேற்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்-பாட்டம் நடந்தது. எம்.பி., கோபிநாத் தலைமை வகித்தார். நகர தலைவர் லலித் ஆண்டனி வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு, பொருளாளர் உமர் மற்றும் பலர் பங்கேற்றனர்.