உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3.04 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.3.04 லட்சத்திற்கு பருத்தி விற்பனை

கிருஷ்ணகிரி,போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், இ-நாம் முறையில், பருத்தி ஏலம் நடந்தது. இதில் பருத்தி அதிகபட்சமாக கிலோ, 78.09 ரூபாய்க்கும், குறைந்தபட்சம், 36.66 ரூபாய்க்கும், சராசரியாக, 76.66 ரூபாய்க்கு விற்பனையானது. இதில், 3,973 கிலோ பருத்தி, 3.04 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.இது குறித்து போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் அருள்வேந்தன் கூறுகையில், ''இங்கு தேசிய மின்னணு வேளாண் சந்தை இ-நாம் முறையில் விவசாய விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஏலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பங்கேற்றனர். இதனால், விவசாயிகளின் பருத்திக்கு நல்ல விலை கிடைத்தது. விற்பனை தொகை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. விவசாயிகள் கொப்பரை, பருத்தி உள்ளிட்ட பொருட்களை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து, கூடுதல் வருவாய் பெறலாம். மேலும் நடப்பு பருவத்தில் நெல் ஏலமும் மின்னணு வர்த்தக முறையில் நடைபெற உள்ளதால், நெல் விவசாயிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ