உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சாராயம், போதை பொருட்களின் தீமை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

சாராயம், போதை பொருட்களின் தீமை மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. டி.ஆர்.ஓ., சாதனைக்குறள் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது-மக்கள் மற்றும் இளைஞர் களுக்கு வழங்கினார்.பேரணியில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன், கல்லுாரி மாணவ, மாணவியர், 400க்கும் மேற்-பட்டோர் சென்றனர். மதுவிலக்கு அமல் பிரிவு டி.எஸ்.பி., சிந்து, தனி தாசில்தார் சரவணன், கோட்ட ஆய அலுவலர் பெரி-யண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்-டனர்.ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், கல்லாவி போலீசார் சார்பில், போதை பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் பற்-குணன் தலைமையில் நடந்தது. இதில், கல்லாவி போலீஸ் எஸ்.ஐ., சசிக்குமார் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ