நண்பரை பார்க்க வந்த டிராவல்ஸ் ஓனர் மாயம்
கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, அண்ணா நகரை சேர்ந்தவர் பாபு, 45. டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் கடந்த, 4ல் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அருகில் வசிக்கும் தன் நண்பர் மாயக்கண்ணன் என்பவரை பார்த்து வருவதாக கூறி வந்துள்ளார். பின் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இது குறித்து பாபுவின் மனைவி மனைவி நேற்று முன்தினம் அளித்த புகார் படி, காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.