வருடாபிஷேகம்
திருநகர்: மதுரை விளாச்சேரி யோக தட்சிணாமூர்த்தி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த நட்சத்திரத்தை முன்னிட்டு கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. யாகம் வளர்க்கப்பட்டு மூலவருக்கு புனிதநீர் அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரமாகி தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.