உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பேரையூரில் 51 மி.மீ., மழை

பேரையூரில் 51 மி.மீ., மழை

மதுரை: மதுரை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. அதிகளவாக பேரையூரில் 51 மி.மீ., மழை பெய்துள்ளது.வடகிழக்கு பருவமழை அக்.15 ல் துவங்கி தொடர்ந்தும், அவ்வப்போது விட்டுவிட்டும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையளவு (மி.மீ.,யில்) வருமாறு:மதுரை வடக்கு 22.2, தல்லாகுளம் 48.6, பெரியபட்டி 9.4, விரகனுார் 11.2, சிட்டம்பட்டி 5.4, கள்ளந்திரி 6.2, இடையபட்டி 30, வாடிப்பட்டி 5, சோழவந்தான் 12, சாத்தையாறு அணை 11.2, மேட்டுப்பட்டி 4.8, ஆண்டிப்பட்டி 1.8, உசிலம்பட்டி 43, குப்பணம்பட்டி 23, விமான நிலையம் 18.6, திருமங்கலம் 42.4, எழுமலை 27.8, கள்ளிக்குடி 6.9.

அணைகளில் நீர்மட்டம்

பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.3 அடி (மொத்த உயரம் 152 அடி). அணையில் 2885 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1377 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 456 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.வைகை அணையின் நீர்மட்டம் 58.17 அடி (மொத்த உயரம் 71 அடி) அணையில் நீர் இருப்பு 3261 மில்லியன் கனஅடி. அணைக்கு வினாடிக்கு 1515 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 964 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.சாத்தையாறு அணையின் 22.6 (மொத்த உயரம் 29 அடி). அணையின் நீர் இருப்பு 34.6 மில்லியன் கனஅடி. அணையின் நீர்வரத்து வினாடிக்கு 28 கனஅடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ