உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சோழவந்தானில் அனுஷ விழா

சோழவந்தானில் அனுஷ விழா

மதுரை: காஞ்சி காமகோடி மடம் சோழவந்தான் மலையாளம் கிருஷ்ண அய்யர் பாடசாலையில் காஞ்சி மகா பெரியவரின் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு அனுஷ விழா நடந்தது. உலக நன்மை கருதி ரிக் வேத பாராயணம், பூஜை, தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹரிஷ் சீனிவாசன் ஐயர், நிர்வாகி கே.ஸ்ரீகுமார், பாலசுப்பிரமணியன், அத்யபகர் வரதராஜ பண்டிட்ஜி செய்திருந்தனர்காஞ்சி காமகோடி மடம் முள்ளிப்பள்ளம் கிளையிலும் அனுஷ விழா நடந்தது. இம்மடத்தில் தினமும் மாலை 131 மாணவருக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு நடக்கிறது. பசு மாடுகள் கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஏற்பாடுகளை வெங்கட்ராமன், வீர மணிகண்டன் செய்திருந்தனர். இங்கு பிப்., 25ல் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 57 வது ஜெயந்தியை முன்னிட்டு உபநிஷத் பாராயணம், பூஜை நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ