உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  சாத்தான்குளம் எஸ்.ஐ., வழக்குசி.பி.ஐ.,பதில் தர உத்தரவு

 சாத்தான்குளம் எஸ்.ஐ., வழக்குசி.பி.ஐ.,பதில் தர உத்தரவு

மதுரை: சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் இறந்தனர். சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ.,கொலை வழக்கு பதிந்தது. மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இருவருக்கும் சிகிச்சை அளித்தது தொடர்பாக ஆய்வு செய்த சுகாதார சேவைகள் துணை இயக்குனரின் அறிக்கை தர உத்தரவிடக்கோரி ரகு கணேஷ் தாக்கல் செய்த மனுவை அந்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தார். நீதிபதி என்.மாலா சி.பி.ஐ.,கூடுதல் எஸ்.பி.,பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு ஜன.5 க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ