உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூட்டுறவு ஊழியர்கள் போராட்டம்

கூட்டுறவு ஊழியர்கள் போராட்டம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி, செல்லம்பட்டி வட்டார தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்கள் சார்பில் ஊதிய உயர்வு உள்ளிட்ட 25 அம்சங்களை வலியுறுத்தி பணிக்குச் செல்லாமல் போராட்டம் நடத்தினர். நேற்று உசிலம்பட்டி அருகே கே. போத்தம்பட்டியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் ராஜா, இணைச்செயலாளர் நீதிமுத்தையா, மகேந்திரன், உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணி நிரந்தரம், முதல்வர் மருந்தகத்தில் விற்பனையை கட்டாயப்படுத்துவதை கண்டிப்பது, தீபாவளிக்கு கூட்டுறவு சங்கம் மூலம் பட்டாசு விற்பனை செய்ய நிர்பந்திப்பதை கண்டிப்பது, அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டடங்களை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி