உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உற்ஸவ சாந்தி பூஜை

உற்ஸவ சாந்தி பூஜை

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனித் திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு உற்ஸவ சாந்தி அபிஷேகம், பூஜை நடந்தது.திருவாட்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளினர். சுவாமி முன்பு தங்கம், வெள்ளி குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை நடந்தது. 11 வகையான திரவிய அபிஷேகங்கள் முடிந்து சுவாமிக்கு தங்கக்குடம், தெய்வானைக்கு வெள்ளிக் குடங்களில் புனிதநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சர்வ அலங்காரத்தில் சுவாமி, அம்மன் ஆஸ்தான மண்டபத்தை வலம் சென்று அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை