கொடி அணிவகுப்பு
-----திருமங்கலம்: தேர்தலை முன்னிட்டு திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் போலீஸ், துணை ராணுவப் படையின் கொடி அணிவகுப்பு நடந்தது. ஏ.எஸ்.பி., அன்சுல் நாகர் தலைமையில் 30 வீரர்கள், 50 போலீசார் கலந்து கொண்டனர். திருமங்கலம் ராஜாஜி சிலையில் இருந்து புறப்பட்டு பஸ் ஸ்டாண்ட், மதுரை ரோடு, விருதுநகர் ரோடு, உசிலம்பட்டி ரோடு வழியாக சந்தைப்பேட்டை வரை சென்றனர்.