மேலும் செய்திகள்
கவுரவ விரிவுரையாளர்கள் கல்லுாரியில் போராட்டம்
18-Feb-2026
திருமங்கலம்: கப்பலுார் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் 40 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர். யு.ஜி.சி., அறிவுறுத்தல்படி சம்பளம் உயர்வு வழங்க வேண்டும். 12 மாதமும் சம்பளம் வழங்க வேண்டும். மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லுாரி வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வணிகவியல் துறைத் தலைவர் சின்னச்சாமி தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் தீபா முன்னிலை வகித்தார்.
18-Feb-2026