உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் 76 இடங்களில் அடிக்கடி விபத்து போலீஸ் ஆய்வில் தகவல்

மதுரையில் 76 இடங்களில் அடிக்கடி விபத்து போலீஸ் ஆய்வில் தகவல்

மதுரை: மதுரை நகரில் போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட ஆய்வில் 76 இடங்கள் அடிக்கடி விபத்து நடப்பவை என கண்டறியப்பட்டு அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நேற்று போலீசாரின் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தமுக்கத்தில் இருந்து கமிஷனர் லோகநாதன் துவக்கி வைத்தார். வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ், சாலை விதிகளை மதித்து வாகனம் ஓட்டியவர்களுக்கு இனிப்பு வழங்கினார். இதில் துணைகமிஷனர் வனிதா, கூடுதல் துணை கமிஷனர் திருமலைக்குமார், உதவிகமிஷனர்கள் செல்வின், இளமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கமிஷனர் கூறியதாவது: நகரில் இதுவரை 76 இடங்கள் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதிகளாக கண்டறியப்பட்டு, அங்கு 'ஜிக் ஜாக்' தடுப்புகள், ரோட்டில் வர்ணம் பூசுதல், ஒருவழிப்பாதை அமைத்தல், ஒளிரும் விளக்குகள் அமைத்தல், ரோட்டின் அமைப்பை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக விபத்து குறைந்துள்ளது. கடந்தாண்டு 26 பேர் சாலை விபத்தில் இறந்துள்ளனர். 88 பேர் காயமுற்றனர். இது முந்தைய ஆண்டுகளைவிட 15 சதவீதம் குறைவு. கடந்தாண்டு போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 4,83,023 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாதசாரிகள் 40 சதவீதம் பேர், டூவீலரில் சென்றவர்கள் 56.5 சதவீதம் பேர் விபத்துக்குள்ளாகி உள்ளனர். பாதசாரிகள் விபத்தில் சிக்குவதை தடுக்க ரோட்டின் மையப்படுகுதியில் கண்டறியப்பட்ட 236 இடைவெளிகள் அடைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி