குடியிருப்போர் பொங்கல் விழா
மதுரை: மதுரை மாநகராட்சி இலந்தைக்குளம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். சிறுவர்களுக்கு ஓட்டம் உள்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.மாலையில் இசைக்கச்சேரி, போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.