ரூ.49.60 லட்சம் உண்டியல் வசூல்
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், உப கோயில்கள், கிரிவல உண்டியல்கள் நேற்று கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி, ஆய்வர் இளவரசி, அறங்காவலர் குழு தலைவர் சத்தியபிரியா, அறங்காவலர்கள் வடிச்செல்வம், வம்பதேவன் சண்முகசுந்தரம், ராமையா முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டன.பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ரூ.49,60,663 மற்றும் தங்கம் 91 கிராம், வெள்ளி 1972 கிராம் இருந்தது. கோயில் பணியாளர்கள், ஸ்ரீ ஸ்கந்த குரு வித்யாலய வேதபாடசாலை மாணவர்கள், பக்தர்கள் பேரவையினர், அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவிகள் உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.