போக்குவரத்து மாற்றம்
மதுரை: மதுரை மாவட்ட நீதிமன்றம் வளாகத்தில் (ஏப்.,19) காலை புதிய நீதிமன்ற கட்டடங்கள் திறப்பு விழா நடக்கிறது. இதில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் நீதிபதிகள் பங்கேற்கின்றனர். இதையொட்டி நாளை அப்பகுதியில் விழா முடியும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. மாட்டுத்தாவணியில் இருந்து நீதிமன்றம் நோக்கி வரும் வாகனங்கள், பஸ்கள் கே.கே. நகர், அரவிந்த் கண் மருத்துவமனை, வைகை வடகரை சந்திப்பில் செல்ல வேண்டும். அவுட்போஸ்டில் இருந்து நீதிமன்றம் நோக்கி செல்ல வேண்டிய வாகனங்கள், தமுக்கம், அரசு மருத்துவமனை ரோடு, ஆவின் சந்திப்பு வழியாக மேலுார் ரோட்டிற்கு செல்ல வேண்டும் என போலீசார் அறிவித்துள்ளனர்.