யுகாதி பூஜை
மதுரை: மதுரை அண்ணாநகர் வெங்கடாஜலபதி கோயிலில் மாமன்னர் திருமலை நாயக்கர் சமூக நலச்சங்கம் சார்பில் தெலுங்கு வருட பிறப்பு (யுகாதி) பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. சேவுக பெருமாள், தாயார் ஆண்டாள் சன்னதிகளில் அலங்கார திருமஞ்சனம் செய்விக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை ராஜேந்திரன், இளங்கோ, சுந்தரராஜன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், முருகன், சேது செய்திருந்தனர்.