திருக்கல்யாணம்
திருநகர்: திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஸ்ரீதேவி பூமாதேவி ஸ்ரீனிவாச பெருமாள் பிரதிஷ்டை தினத்தையொட்டி திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. நேற்று காலை அனுக்கை பூஜை, பஞ்ச சூக்த ஹோமம், தீபாராதனை நடந்தது. இரவு 8:00 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.