ரேஷன் குறைதீர் முகாம்102 மனுக்களுக்கு தீர்வு
ரேஷன் குறைதீர் முகாம்102 மனுக்களுக்கு தீர்வுநாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் போன் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை, நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி மேற்கொள்ள, பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, ப.வேலுார், குமாரபாளையம் என, எட்டு தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், ரேஷன் குறைதீர் முகாம் நடந்தது. மாவட்டம் முழுவதும், எட்டு தாலுகாவில் நடந்த முகாமில், மொத்தம், 102 மனுக்கள் வரப்பெற்றன. அவை அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டது.