புகையிலை பொருள் 4.5 கிலோ பறிமுதல்
புகையிலை பொருள்4.5 கிலோ பறிமுதல்குமாரபாளையம், நவ. 10-தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், குமாரபாளையத்தில் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார அலுவலர் ராமமூர்த்தி தலைமையில், அரசு பள்ளி அருகே உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இதில், 4.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதில், எஸ்.ஐ., சந்தானகிருஷ்ணன், சுகாதார பணி மேற்பார்வையாளர்கள் சுப்ரமணி, பரமேஸ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.