உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தீபாவளியையொட்டி 50 சிசிடிவி பொருத்தம்

தீபாவளியையொட்டி 50 சிசிடிவி பொருத்தம்

நாமக்கல்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகர பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாவட்ட காவல் கண்காணிப்-பாளர் ராஜேஸ்கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தார். நாடு முழுவதும், தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. அதையடுத்து, கடந்த சில நாட்களாக, புத்தாடைகள், நகைகள், பட்டாசு, இனிப்பு வகைகள் வாங்குவதற்காக, நாமக்கல் கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்-தனர்.அதற்காக, பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, சேலம் சாலை மற்றும் பரமத்தி சாலை பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பொருத்-தப்பட்டுள்ளது. அதன் பதிவுகளை, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டள்ள 'மெகா' சைஸ் திரையில், எஸ்.பி., ராஜேஸ்கண்ணன், நேற்று நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என, போலீசாருக்கு அறிவுறுத்தினார். இன்ஸ்-பெக்டர் கபிலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !