நாமக்கல் உழவர் சந்தையில் 57 டன் காய்கறி விற்பனை
நாமக்கல்: நாமக்கல், கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்-பட்டு வருகிறது. தினசரி காலை, 5:00 மணி முதல், 10:00 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்-களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். வழக்கமாக, வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமை-களில் அதிகமான பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து தங்க-ளுக்கு தேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்வது வழக்கம். நேற்று, வழக்கத்தை விட உழவர் சந்தையில் விறுவி-றுப்பாக வியாபாரம் நடந்தது.மொத்தம், 46,990 கிலோ காய்கறிகள், 10,230 கிலோ பழங்கள், 35 கிலோ பூக்கள் என மொத்தம், 57,255 கிலோ எடையுள்ள விளைபொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்-பனை செய்யப்பட்டன.நேற்று தக்காளி ஒரு கிலோ, 28 ரூபாய், கத்தரி, 60, வெண்டை, 28, புடலங்காய், 60, பீர்க்கங்காய், 60, பாகற்காய், 64, அவரை, 100, சின்ன வெங்காயம், 44, பெரிய வெங்காயம், 30, தேங்காய், 72 என்ற விலையில் விற்பனையானது.மொத்தம், 11,451 பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்க-ளுக்கு தேவையானவற்றை வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில், 25 லட்சத்து, 7,940 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையா-கின.