மேலும் செய்திகள்
தேசிய வேளாண் சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம்
17-Oct-2025
ப.வேலுார்,ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. ப.வேலுார், மோகனுார், பொத்தனுார், பாண்டமங்கலம், வெங்கரை, கபிலர்மலை, ஜேடர்பாளையம், பரமத்தி பகுதிகளில் இருந்து, 2,850 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்ச மாக கிலோ, 226.69 ரூபாய், குறைந்தபட்சமாக, 215.31 ரூபாய், சராசரியாக, 225.69 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 6 லட்சத்து, 13 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
17-Oct-2025