ஷீரடி சாய் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்த பக்தர்கள்
நாமக்கல் நாமக்கல்-திருச்சி சாலை, ஷீரடி சாய் தத்தா பிருந்தாவனத்தில் ராம நவமி, பிரதிஷ்டை தினம், குரு பூர்ணிமா, குரு ராகவேந்திரா ஆராதனை, விநாயகர் சதுார்த்தி, விஜய தசமி மற்றும் தத்தாத்ரேயர் ஜெயந்தி ஆகிய நாட்களிலும், ஒவ்வொரு வியாழக்கிமையும் சிறப்பு ஆரத்தி நடப்பதுண்டு. அந்த வகையில் நேற்று வைகாசி மூன்றாவது வியாழக்கிழமையை முன்னிட்டு நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, காகட ஆரத்தி, 8:00 மணிக்கு அபி ேஷகம், 12:00 மணிக்கு பஜனை, கூட்டு பிரார்த்தனை, வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பித்து மதியம் ஆரத்தி நடந்தது. மாலை 6:00 மணிக்கு துாப் ஆரத்தி, இரவு 8:30 மணிக்கு இரவு ஆரத்தி நடந்தது. தொடர்ந்து பல்லக்கு ஊர்வலமும் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமாேனார் ஷீரடி சாயை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.