உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் கவலை

வாழைத்தார் விலை சரிவு விவசாயிகள் கவலை

ப.வேலுார்,ப.வேலுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான, பரமத்தி, பொத்தனுார், நன்செய் இடையாறு உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில், 1,000 ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு, பூவன், ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்படுகிறது. விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, ப.வேலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர்.கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற பூவன் தார், தற்போது, 250 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி வாழைத்தார், 300 ரூபாய், 400 ரூபாய்க்கு விற்ற கற்பூரவள்ளி, 300 ரூபாய், ஐந்து ரூபாய்க்கு விற்ற, ஒரு மொந்தன் காய், தற்போது, மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை சரிவால், வாழை விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ