அரசு அறிவியல் கல்லுாரியில் அறிமுக பயிற்சி முகாம்
குமாரபாளையம், குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அறிமுக பயிற்சி முகாம் முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. தேசிய கல்வி உதவித்தொகை மற்றும் ஏ.பி.சி.ஐ.டி.,யின் பயன்கள், உயர்கல்வியில் மாணவர்கள் பெற்ற வரவுகளை டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்க உதவுவது குறித்து முகாமில் வலியுறுத்தப்பட்டது. மாணவர்களின் ஒழுக்கம், சமுக முன்னேற்றத்தில் பங்கு, இலக்கை அடைதல், ஞானத்தோடு கூடிய பகுத்தறிவு, உயர்ந்த எண்ணம், தொலைநோக்கு பார்வை, அன்பு கலந்த கல்வி ஆகியவற்றை பற்றி கூறப்பட்டது. உடல் நலம், சுகாதாரம், மனநலம் பேணுதல், நோய்கள் வராமல் தடுப்பது மற்றும் ஆரோக்கியாமான சூழலை உருவாக்குவது பற்றி பேசினர்.அரசு கல்வியியல் கல்லுாரி முதல்வர் அருணாச்சலம், பேராசிரியர் சிவக்குமார், பேராசிரியை தமிழ்ச்செல்வி, அரசு மருத்துவமனை செவிலியர்கள் அமுதவள்ளி, கலைச்செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.