லாரி தொழிலில் நஷ்டம்; கடன் தொல்லை அதிகரிப்பு நாமக்கல்லில் விஷம் குடித்து தற்கொலை செய்த தம்பதியர்
நாமக்கல்: லாரி தொழிலில் நஷ்டம், கடன் தொல்லை அதிகரிப்பால் ஏற்-பட்ட மன உளைச்சல் காரணமாக, நாமக்கல்லில் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் - சேலம் சாலை, முதலைப்பட்டி அருகே ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் குணசேகரன், 50; மனைவி சந்திரகலா, 46. தம்ப-தியருக்கு, நிவாஷ், 28, சஞ்சய், 19, என, இரண்டு மகன்கள் உள்-ளனர். முதல் மகன், லாரி டிரைவராக அசாமில் உள்ளார். இளைய மகன், திருச்சி பாரதிதாசன் பல்கலையில் படித்து வருகிறார். குணசேகரன், கடனில் சொந்தமாக லாரி வாங்கி ஓட்டி வாழ்க்கை நடத்தி வந்துள்ளார். அதில் போதிய வருமானம் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டதால், வாங்கிய கடனை கட்டமுடியாமல் கணவன், மனைவி இருவரும் மன உளைச்சலில் இருந்துள்ளனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். நேற்று காலை, 6:00 மணி ஆகியும் வீட்டின் கதவு திறக்காததால், அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, குணசேகரன், சந்திரகலா ஆகிய இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுகுறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், உடலை மீட்டனர். போலீசாரின் முதல்கட்ட விசார-ணையில், லாரி தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், கடன் தொல்லை அதிகரித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்-தது. இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.