உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / லாட்டரி விற்றவர் கைது

லாட்டரி விற்றவர் கைது

குமாரபாளையம், குமாரபாளையத்தில் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார், ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோட்டைமேடு, ஆலங்காட்டுவலசு பகுதியில் லாட்டரி விற்பது தெரியவந்தது. நேற்று இரவு, 7:00 மணிக்கு அங்கு சென்ற போலீசார், லாட்டரி விற்ற அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சஞ்சய், 32, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !