வெங்கரையம்மன் கோவிலில் மார்கழி படி பூஜை கோலாகலம்
ப.வேலுார்: ப.வேலுார் அருகே, வெங்கரையில் பிரசித்தி பெற்ற வெங்கரை-யம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலை-யத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு-தோறும் மார்கழி மாத படி பூஜை நடப்பது வழக்கம். இதை தொடர்ந்து, நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு பொது பொங்கல் வைத்து சுவாமிகளுக்கு படையல் போடும் நிகழ்ச்சியும் தொடர்ந்து, கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்து வெங்கரை அம்மன், ரெங்கையன், அல்-லாளி, தொட்டியத்தான் சுவாமிகளுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.மதியம், 12:00 மணிக்கு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. விழாவில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, ஈரோடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடு-களை செயல் அலுவலர் கிருஷ்ணராஜ், ஆய்வாளர் ஜனனி, தக்கார் வினோதினி, வெங்கரை காளியம்மன் மூலகுல வேட்டுவ கவுண்டர்கள் குடிபாட்டு மக்கள் செய்திருந்தனர்.