உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறியூர் மாரியம்மன் கோவிலில் வரும் 18ல் பூ குண்டம் திருவிழா

சிறியூர் மாரியம்மன் கோவிலில் வரும் 18ல் பூ குண்டம் திருவிழா

ஊட்டி; ஆண்டு தோறும் அருள்மிகு சிறியூர் மாரியம்மன் கோவிலில் மஹா பூ குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. நடப்பாண்டு குண்டம் திருவிழாவை ஒட்டி வரும், 16ம் தேதி அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.17ம் தேதி மதியம் , 1:00 மணிக்கு பூ குண்டத்திற்கு மரம் கொண்டு வருதல் நிகழ்ச்சி பிற்பகல், 3:00 மணிக்கு ஸ்ரீ மாசி கரியபண்ட அய்யன் அழைப்பு, 3:30 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 12:00 மணிக்கு நவதானிய பூஜை நடக்கிறது. 18ம் தேதி காலை, 7:00 மணிக்கு பூ குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் ஒரு பகுதியாக, 17ம் தேதி இரவு, 8:00 மணிக்கு உயிலட்டி ஸ்ரீ சக்தி நாடக மன்றத்தால், 'உரி ஓகி சிரி பர்லி(கஷ்டங்கள் ஒழிந்து மகிழ்ச்சி பிறக்கட்டும்)' எனும் படுக சமூக நாடகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கூக்கல் எட்டட்டி கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை